கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களின் பதவி பிரமானம் வெள்ளிக்கிழமை 28.09.2012 காலை நடைபெற உள்ளது. திருகோணமலை நகர சபை மண்டபத்தில் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் பதினொரு உறுப்பினர்களும் பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும். பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
காலை 8.30 மணிக்கு அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட் வழிபாடுகளில் ஈடுபடும் இவர்கள் கடற்படைதத்தள வீதி வழியாக ஊர்வலமாக நகர சபை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment