Wednesday, November 7, 2012

தற்கொலை

திருகோர்ணமலையில்  இருந்து கொழும்பு நோக்கி இன்று இரவு புறப்பட்ட தபால் தொடர்வண்டியில் தலை வைத்து 48 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தொடர்வண்டி மேடையை விட்டு அகன்ற  பின்னரே இத்தற்கொலை  புகையிரத பொலிசாரால் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. மேடையின் அடுத்த  பக்கத்தில் இருந்தே  இவர் தண்டவாளத்தில் தலை வைத்து இம் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.  உயிரை மாய்ந்து கொண்டவர் பாலையுற்றில் வசிக்கும் பெனடிக்ற் ஏனஸ்ற் ராமனாதன் என  அடையாம் கண்டு கொள்ளப்பட்டுள்ளார். தற்கொலைக்கான  காரணம் என்வென்று இன்னமும் புலனாகவில்லை. திருகோணமலை தலைமையக பொலிசார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment