Saturday, November 24, 2012

ஈஸ்ரன் ஈகிள்ஸ் வெற்றி

திருகோணமலை உதைபந்து லீக் கழகங்களுக்கு இடையே லீக் முறையில் சுற்றுப்  போட்டியினை மெக்கெய்சர் மைதானத்தில் நடத்தி வருகின்றது.  10.11.2012ல் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் போட்டியில் ஏழு கழகங்கள் பங்கு கொள்கின்றன.
இன்று சனிக்கிழமை  நடைபெற்ற போட்டியில் புக் புட் கழகத்தை எதிர்த்து ஈஸ்ரன் ஈகிள்ஸ் கழகம் விளையாடியது. இதில் ஈஸ்ரன் ஈகிள்ஸ் கழகம் புட் கழகத்தை 2க்கு 1 எனற் கோல் கணக்கில் வெற்றி கொண்டது.
 நாளை  ஞாயிற்றுக்கிழமை  காலை 8.30 மணிக்கு ஓலிம்பிக்கஸ் கழகத்தை எதிர்த்து பற்றிமா விளையாட்டுக் கழகமும், மாலை  3.00 மணிக்கு  புனித அந்தோனி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கிறீன் லைட் கழகமும் விளையாட உள்ளன.

No comments:

Post a Comment