Sunday, August 17, 2014

மர்ம நபர்கள்

திருகோணமலையில் மீண்டும் மர்ம நபர்களின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  நிலாவெளி பொலிஸ் பிரிவில் இந்த அச்சம்  கடந்த வாரம் முதல்  தோன்றி உள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 15.08.2014 நள்ளிரவு  எட்டாவது மைல்  பிரதேசத்தில் 5 வீடுகளில் இந் நபர்களின் நடமாற்றம் காணப்பட்டுள்ளது. இது பற்றி பொலிஸ் நிலையத்தில் புகாரிடப்பட்டுள்ளது.

வீடுகளில் மக்கள்ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இங்கு வரும் இந்நபர்கள் வீட்டு  ஜன்னல்களை  திறந்து கொண்டு அதன்மூலம் உள்நுழைந்து வீடுகளுக்குள் எதனையோ தேடுகின்றனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இம்மாவட்டததில் கிறீஸ் மனிதர்களின் நடமாற்றம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்துள்ளது.

No comments:

Post a Comment