Sunday, November 11, 2012

வேல்ஸ் ஆறு விக்கட்டுக்களால் வெற்றி


 திருகோணமலை யங் ஒலிம்பிக்ஸ் கழகத்திற்கும் வேல்ஸ் கழகத்திற்கும் இடையிலான  battle  of  the kings  கிரிக்கெட் போட்டி இன்று 11.11.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஆறாவது தடவையாக   இப்போட்டி  இடம்பெற்றது. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  யங் ஒலிம்பிக்ஸ் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 40 பந்த பரிமாற்றங்களில் சகல விக்கட்டக்களையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.  நரேஷ்குமார் 43 ஓட்டம், எரோன்ஸ் 23, திலக்சன் 18, வினோத் 18 ஓட்டங்களைப் பெற்றுக் கொடத்தனர். பந்து வீச்சில் பிரசாத், பிரதீபன், தேவவிதுரன் ஆகியோர்  தலா 2   விக்கட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
146 என்ற  இலக்கினை வென்றால் வெற்றி என்ற  இலக்குடன் களம் இறங்கிய  வேல்ஸ் கழகம் 38 பந்த பரிமாற்றங்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுக் கொண்டது. சதீஸ்குமார் ஆட்டம் இழக்காது 72 ஒட்டங்களையும்.  சுதர்சன் 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியின்  ஆட்ட நாயகனாக மூன்று ஆறு ஓட்டங்கள்.  ஆறு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 72 ஒட்டங்கள் பெற்ற சதீஸ்குமார் தெரிவு செய்யப்பட்டார்.

வேல்ஸ் கழகத்தைச் சேர்ந்து கோபி சிறந்த களத்தடுப்பாளராகவும்,
பிரதீபன் சிறந்த பந்து வீச்சாளராகவும்.
ஒலிம்பிக்ஸ் கழகத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும்
தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







1 comment:

  1. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி...

    (http://www.geevanathy.com/2012/11/some-useful-websites.html) மூலம் உங்கள் தளம் வருகை... தொடர்கிறேன்... நன்றி...

    ReplyDelete