Friday, January 11, 2013

நிவாரணம் வழங்கல்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு  திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களக்கு நிவாரணம் வழங்கி வைக்கப்ட்டது.கனடா அன்பர்களின் நிதி உதவியுடன் இவை  வழங்கப்பட்டது.

யுத்தத்தால் இடம் பெயர்ந்து கட்டைபறிச்சான  நலன்புரி நிலையத்தில் தங்க  வைக்கப்பட்டவர்களும் இவ் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் குறையை போக்கும் முகமாக  இவை  வழங்கி வைக்கப்பட்டது. 385 குடும்பங்களுககு  வியாழக்கிழமை இது விதியோகம் செய்து வைக்கப்பட்டது.

கிழக்கு  மாகாண சயைின் எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களான  கு.நாகேஸ்வரன். ஜெ.ஜனார்தனன், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  மூதூர், வெருகல், பட்டணமம்சூழலும் பிரதேச  சபைகளின் உறுப்பினர்களும்,  திருகோணமலை நகர சபை  உறுப்பினர்கள் சிலரும் இதில் இணைந்து கொண்டிருந்தனர்.




No comments:

Post a Comment