Saturday, August 9, 2014

குண்டுத்தாக்குதல்

திருகோணமலை கண்டி வீதியில் 5வது மைல் கல் பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை 08.08.2014 நள்ளிரவு மர்ம நபர்கள் கைக்குண்டு வீச்சு தாக்குதல் நடத்திஉள்ளனர். வீட்டில் சிறுசேதம் ஏற்பட்டுள்ளது. சீனன்குடா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி வீதி 357ம் இலக்க வீட்டின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் விமலரட்ண கருத்து தெரிவிக்கையில் நள்ளிரவு 11.30 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் பார ஊர்தியின்  டயர் வெடிக்கும் சத்தம் கேட்டதாக முன் அறையில் தூங்கியமகன் தெரிவித்தார். நாமும் அதனை பெரிதாக எண்ணயிருக்கவில்லை. 

காலையில் நீர்குழாயில் இருந்து நீர் பெருமளவில் வடிந்தோடிக் கொண்டிருந்தது. அதனை திருத்தம் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குண்டு வீசப்பட்டதாக  உணர்ந்தேன். விடயம் 119 இலக்கம் மூலம் பொலிசுக்கு தெரிவிக்கப்ட்டது. அவர்கள் வந்து விசாரணை செய்த போது கை்குண்டு ஒன்றின்கிளிப்பினை கண்டு கொண்டனர்.

எமக்கு எவர் மீதும் சந்தேகம் இல்லை. நாம் யாரை சந்தேகிப்பது. ஆனாலும்  குண்டுத் தாக்குதல் எம்வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டது எமக்கு கவலையைத் தருகின்றது. என்றார். 

விமலரட்ணவின்மனைவி வினித்தா பிரதேச சிவில் பாதுகாப்பு குழுவின் உபதலைவராக இருந்து வருகின்றார்.





No comments:

Post a Comment