Monday, October 29, 2012

மாணிக்க கல்தேடும் மக்கள்


நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அடுத்து ஆறுகள், குளங்கள், மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்ற நிலையில் திருகோணமலை கந்தளாயைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கந்தளாய் குளத்தைச் சுற்றி இருந்து மாணிக்கக் கற்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து கரையில் சில மாணிக்கக் கற்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து அந்த தகவல் குளத்தை அண்மித்துள்ள கிராமங்களுக்கு பரவியதை அடுத்து கடும் மழையையும் பொருட்படுத்தாத கிராம வாசிகள் கந்தளாய் குளத்தை சுற்றி நின்று மாணிக்கக்கல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பொதுமக்களுக்கு சில மாணிக்கக் கற்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் குளத்தைச் சுற்றி சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment