Thursday, November 1, 2012

மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்

கிண்ணியா கல்வி வலயத்தில் அதி கஸ்ட பிரதேச 20 பாடசாலைகளில் கல்வி பயிலும் 200 மாணவர்களுக்கு துவிச்சகர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தனியார் போக்குவரத்து  சங்கமும் இணைந்து இதனை வழங்கி உள்ளனர். சிசுசரிய திட்டத்தின் கீழ் இனி கஸ்டம் இன்றி பாடசாலைக்குச் செல்லல் என்னும் கருப்பொருளில் இவ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

 கிண்ணியா குறிஞ்சாக்கேணி பெண்கள் பாடசாலையில் இந் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. கிழக்கு  மாகாண  கல்வி பண்பாடு காணி போக்குவரத்து  அமைச்சின் செயலாளர் ஏ.ஏ. புஸ்பகுமார பிரதம அதிதியாக  இதில் கலந்து கொண்டார்.கிண்ணியா பிரதேச  சபை  தவிசாளர் எஸ்.எல்.எம்ஜவாதுள்ளா கேட்டுக் கொண்டதற்கிணங்க  போக்குவரதத ஆணைக்குழு இதனை  வழங்கி வைத்துள்ளது. கிழக்கு  மாகாணதனியார் போக்குவரத்துசபைத் தலைவர் கருணாரட்ண, கிழக்கு  மாகாண வீதி போக்குவரதத அதிகார சபை பணிப்பாளர் உதயகுமார் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். 


குறிஞ்சாக்கேணி பெண்கள் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.
எம்.பரீட்

No comments:

Post a Comment