Thursday, December 27, 2012

இந்திய கடற்படை கப்பல் திருமலையில்

இந்திய  கடற்படைக்குச் சொந்தமான  கப்பல்  'கார்னிகோபர்'  திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 25.12.2012 செவ்வாய்க்கிழமை இது திருகோணமலையை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினர் இக்கப்பலையும் அதில் வந்த படை வீரர்களையும் கடற்படை  கலாசாரத்திற்கு அமைய வரவேற்றிருந்தனர்.
இந்திய  படையினருக்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என  இந்திய அரசியல்வாதி சுப்பிரமணியசுவாமி தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இக்கப்பலில் எத்தனை படைவீரர்கள் உள்ளனர். என்ன நோக்கத்திற்காக  திருகோணமலைக்கு  வந்தது  எவ்வளவு காலம் தரத்து இருக்கும் போன்ற விடயங்களை  வெளியிட கடற்படை மறுத்துள்ளது..

No comments:

Post a Comment