Wednesday, January 9, 2013

வான் திறப்பு

கந்தளாய் குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நிலமையைக் கட்டுப்படுத்த அவசர வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றது. 10 வான் கதவுகளும் திறக்கப்பட்டு ள்ளது. இதன் காரணமாக  தம்பலகாமம் கிண்ணியா வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் திருகோணமலை ஊடாக   பயணத்தை தொடர்கின்றன.



தம்பலகாமம், முள்ளிப்பாத்தாணை போன்ற  இடங்களில் பெருமளவான வயல் நிலங்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
45 அடி உயரத்தைக் கொண்டுள்ள கந்தளாய் குளத்தில் 115,000  கன ஏக்கர் அடி நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. குளத்தில் இருந்து வெளியேறும் நீரினால் அருகில் உள்ள சிறிய குளங்களும் நிரம்பிக் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment