Friday, June 21, 2013

சிறிய நடுத்தர வியாபார முயற்சி

யுனியன் வங்கியின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில்  சிறிய நடுத்தர முதலீட்டாளர்களுக்கு  தொழிலை ஆரம்பிப்பது. அதனை கொண்ட நடத்துவது என்பன பற்றி வழிப்புட்டும் பயிற்சி செயலமரவு ஒன்று நடத்தப்பட்டது.
கண்டி வீதி நான்காவது மைல் கல்லில்  அமைந்துள்ள மாவட்ட செயலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் வங்கியின் முகாமையாளர்  வருண பொன்சேகா தலைமையில் நடத்தப்பட்டது.
  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.யுனியின் வங்கியின் தலைமை அலுவலக நுண்கடன் பிரிவு முகாமையாளர் ஜானக எதிரிசிங்கவும் இதில் பங்கேற்றார்.
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 320 சிறிய நடுத்தர முதலீட்டாளர்கள் இச் செயலமர்வில் பங்கு கொண்டு பயனடைந்தனர்.

மதியம்1.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இச் செயலமர்வு மாலை 6.15 மணி வரை நடைபெற்றது.

No comments:

Post a Comment