Tuesday, July 2, 2013

துண்டிக்கப்பட்ட கை பொருத்தப்பட்டது.

முற்றாக துண்டிக்கப்பட்ட கையினை சத்திரசிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி, திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இச்சிகிச்சை கடந்த மாதம் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட் டுள்ளது.
 
அறுவை சிகிச்சை நிபுணர் ரொகான் சிறினோ தலைமையிலான வைத்தியர் குழுவே மேற்படி சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை காலமும் இவ்வாறான சிகிச்சைகள் கண்டி, கொழும்பு போன்ற மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் இவ்வாறான மருத்துவமனைக்கே அனுப்பப்படுவது வழக்கம். தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சகல சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment