Friday, December 21, 2012

வெருகலில் வெள்ளம்

 திருகோணமலை மாவட்டம் தெற்கே உள்ள  சின்னக்கதிர்காமம் என்று போற்றப்படும் வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஆலயத்தின் சுற்றாடலில் 4 அடிக்கு மேல் வெள்ளம் காணப்படுகின்றது. ஆலயத்தினுள்ளும் வெள்ள  நீர் சூழ்ந்துள்ளது.

நேற்று  இரவு மகாவெலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக  இந் நிலை தோன்றியுள்ளது.  வெருகல் பிரதேசத்து மக்கள்  பொலிசாரால் பர்துகாப்பாக  அகற்றப்பட்டுள்ளனர். ஆலயத்தின் அருகில் உள்ள பொலிஸ் காவல் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.



No comments:

Post a Comment